சினிமா
அழகு இரண்டாம் பட்ஷம் தான்; கதாபாத்திரம் தான் முக்கியம்! ‘லப்பர் பந்து’ நடிகையின் பகிர்வு..
அழகு இரண்டாம் பட்ஷம் தான்; கதாபாத்திரம் தான் முக்கியம்! ‘லப்பர் பந்து’ நடிகையின் பகிர்வு..
செப்டம்பர் 20, 2024 அன்று திரையரங்குகளில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. சமூக வலைத்தளங்களில் புகழாரம் பெற்று, விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்ற இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஸ்வாசிகா.தற்போது அவர் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு, இந்த படத்தின் அனுபவங்கள் மற்றும் கதாபாத்திரத்தின் தாக்கம் குறித்து திறமையாக பகிர்ந்துள்ளார். ‘லப்பர் பந்து’ திரைப்படம், சிறந்த கதைக்கரு மற்றும் தைரியமான கதாபாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்தது.ஸ்வாசிகா சமீபத்தில் ஒரு ஊடகவியலாளர் உடனான நேர்காணலில் இந்தப்படம் குறித்த சில உண்மையான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். “லப்பர் பந்து படம் பண்ணும் போது, நான் லொகேஷனிலிருந்து என் கணவருக்கு புகைப்படங்கள் அனுப்புவேன். அவைகளைப் பார்த்து அவர் கொஞ்சம் டென்சனாகிவிடுவார். ‘நீ என்ன இப்படி இருக்கிற?’ என்று கேட்பார்.””அப்போ நான் சொல்வேன், படம் ரிலீஸாகும் போது பாருங்க. இது ஒரு பவர் புல்லான கதாபாத்திரம். அழகு எல்லாம் இரண்டாம் பட்ஷம் தான். கதாபாத்திரம் தான் முக்கியம்.” என்று தனது கணவருக்கு கூறியதனை நேர்காணலில் தெரிவித்திருந்தார். ஸ்வாசிகாவின் இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது. அத்துடன், ‘லப்பர் பந்து’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற ஒரு படமாக அமைந்தது. இதில் ஸ்வாசிகாவின் நடிப்பை பல விமர்சகர்கள் எடுத்துரைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.