உலகம்

ஈரானுக்கு முக்கியமான வாரம் : அமெரிக்கா போரில் ஈடுபடுமா? ட்ரம்ப் கூறும் தகவல்!

Published

on

ஈரானுக்கு முக்கியமான வாரம் : அமெரிக்கா போரில் ஈடுபடுமா? ட்ரம்ப் கூறும் தகவல்!

வரும் வாரம் ஈரானுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.

ஈரான்-இஸ்ரேல் மோதலில் அமெரிக்கா ஈடுபடுவதற்கான அதிக வாய்ப்பு உள்ள சூழலில், பல அமெரிக்க போர் விமானங்கள் இப்பகுதிக்கு அனுப்பப்படுவதாக நேற்று செய்தி வெளியானது.

Advertisement

மத்திய கிழக்கில் ஐந்து நாடுகளில் அமெரிக்க இராணுவ தளங்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன, மேலும் அவற்றில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 40,000 ஆகும்.

மேலும், ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவில் நிறுத்தப்பட்டுள்ள பல போர்க்கப்பல்கள் ஏற்கனவே ஈரானிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவதில் இஸ்ரேலுக்கு உதவுகின்றன.

இதுபோன்ற சூழலில், தென் சீனக் கடலில்q நிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் நிம்ஸ் போர்க்கப்பல் உட்பட பல ஏவுகணை எதிர்ப்பு கப்பல்கள் மத்திய கிழக்குப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Advertisement

இந்நிலையிலேயே ட்ரம்ப் மேற்படி கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version