இலங்கை
எரிபொருள் பவுசருடன் மோதிய முச்சக்கரவண்டி : வைத்தியர் பலி!
எரிபொருள் பவுசருடன் மோதிய முச்சக்கரவண்டி : வைத்தியர் பலி!
மட்டக்களப்பிற்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று, எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
முச்சக்கர வண்டி ஓட்டுநர் படுகாயமடைந்து முதலில் மூதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இறந்த மருத்துவரின் உடல் தற்போது சேருநுவர மருத்துவமனையில் உள்ளது.
சம்பவம் குறித்து சேருநுவர போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை