இலங்கை

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக கிருஷ்ணன் கோவிந்தராசன் தெரிவு!

Published

on

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக கிருஷ்ணன் கோவிந்தராசன் தெரிவு!

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேச்சை குழுவினை சேர்ந்த கிருஷ்ணன் கோவிந்தராசன் தெரிவு  செய்யப்பட்டுள்ளார்.

காரைநகர் பிரதேச சபையின் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான கூட்டம்  வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பாபு தேவ நந்தினி தலைமையில் இடம்பெற்றது .

Advertisement

இதன் பொழுது சுயேட்சை குழு   2 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய கட்சி 2 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2 ஆசனங்களையும்,தேசிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும், தமிழ் மக்கள் கூட்டணி 2 ஆசனங்களையும், இலங்கை தமிழரசு கட்சி 1 ஆசனத்தையும் கொண்டிருந்த நிலையில் கிருஷ்ணன் கோவிந்தராசனின் பெயர் முன்மொழியபட்ட நிலையில் அவர் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.

 

இதேவேளை உபதவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியின் ஆண்டி ஐயா விஜயராசாவின் பெயர் முன்மொழியபட்ட நிலையில் மாற்று தெரிவுகளின்றி ஏகமனதாக முன்மொழியப்பட்ட நிலையில் தெரிவு இடம்பெற்றது.

Advertisement

 

இதேவேளை தமிழ் மக்கள் கூட்டணி ,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் , சுயேட்சை குழு என்பன சுழற்சி முறையில் ஆட்சியை அமைக்க  இணக்தினை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தமிழ் மக்கள் கூட்டணி ,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் , சுயேட்சை குழு என்பன சுழற்சி முறையில் ஆட்சியை அமைக்க  இணக்தினை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version