இலங்கை

டெங்கு ஒழிப்பு வாரம்!

Published

on

டெங்கு ஒழிப்பு வாரம்!

எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை 16 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை காரணமாக நுளம்புகளின் பரவல் அதிகரித்துள்ளதால், அதைக் கட்டுப்படுத்த இந்த டெங்கு ஒழிப்பு வாரத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் ஆலோசகரும், சமூக மருத்துவ  நிபுணருமான பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார். 

Advertisement

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சமூக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர இதனைத் தெரிவித்தார். 

நாடு முழுவதும் இதுவரை 26,000இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் 

இதுவரை ஒரு குழந்தை மரணம் பதிவாகியுள்ளதாகவும், மேலும் 45 வீதமான நோயாளிகள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சமூக மருத்துவ நிபுணருமான பிரஷிலா சமரவீர தெரிவித்தார்.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version