சினிமா
“தக் லைஃப்”கர்நாடகாவில் வெளியாகாததால் கோடி நஷ்டம்! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!
“தக் லைஃப்”கர்நாடகாவில் வெளியாகாததால் கோடி நஷ்டம்! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!
கமல் ஹாசன் மற்றும் சிம்பு இணைந்து நடித்திருக்கும் “தக் லைஃப்” திரைப்படம், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், கர்நாடகா மாநிலத்தில் இதன் வெளியீடு குறித்து ஏற்பட்ட சர்ச்சை ஏற்பட்டிருந்தது.தற்போது இந்த திரைப்படத்தினை கர்நாடகா மாநிலத்தில் வெளியாகாதால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .இசைவெளியீட்டு விழாவில் கன்னட மொழி தமிழில் இருந்து பிரிந்தது என்று கூறிய விடயம் கன்னட மக்கள் மத்தியல் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. மேலும் “தக் லைஃப்” படத்தினை கர்நாடக மாநிலத்தில் வெளியிட கூடாது என பல தரப்பட்ட அமைப்புக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பிரச்சனைக்கு தீர்வு காண்பத்ற்கு படக்குழுவினர் நீதிமன்றத்தினை நாடி இருந்தனர்.மேலும் இந்த படத்தினை கர்நாடகா மாநிலத்தில் வெளியாகாதால் 30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உச்ச நீதி மன்றத்தில் ராஜ்கமல் ஃ பிலிம்ஸ் இன்டர்நேஷனல் எனக் கூறிய உள்ளர்னர். இத் தகவல்கள் அறிந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. மேலும் ரசிகர்கள் தங்கள் கருத்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.