பொழுதுபோக்கு

தமிழ் சினிமா வாரிசு நடிகை; திருமணமாகி 15 நாட்களில் நடந்த துயரம்: இவருக்கு என்னதான் ஆச்சு?

Published

on

தமிழ் சினிமா வாரிசு நடிகை; திருமணமாகி 15 நாட்களில் நடந்த துயரம்: இவருக்கு என்னதான் ஆச்சு?

தனது 26-வது வயதிலேயே திரையுலகை விட்டு விலகிய கனகா, தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவரது திடீர் விலகல், திறமையான அந்த நடிகைக்கு என்ன ஆனது என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியது.1980-களின் பிற்பகுதியில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் கொடிகட்டிப் பறந்த நடிகை கனகா, திடீரென பொதுமக்கள் பார்வையிலிருந்து விலகி பல தசாப்தங்கள் கடந்த பின்னரும், இன்றும் ஒரு புதிராகவே இருக்கிறார்.”கரகாட்டக்காரன்” திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, நடிகை கனகா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முகமாக மாறினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, மம்மூட்டி, ராமராஜன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.கனகாவின் சினிமா வாழ்க்கை “விரலுக்கேத்த வீக்கம்” (1999) என்ற திரைப்படத்துடன் திடீரென முடிவுக்கு வந்தது. நகைச்சுவை நடிகர் விவேக்குடன் இணைந்து நடித்த இந்தப் படமே, கனகாவின் கடைசிப் படமாக அமைந்தது.தாய் தேவிகாவின் மறைவுக்குப் பிறகு, கனகா தனிமையிலேயே வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2013-ல் அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவியபோது, அவர் தானே முன்வந்து, தான் நலமாக இருப்பதாகத் தெளிவுபடுத்தினார்.கனகா ஏன் பொதுவாழ்வில் இருந்து விலகினார், அவர் எங்கு இருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது குறித்த கேள்விகள் இன்றும் ரசிகர்களிடையேயும், திரையுலக வட்டாரத்திலும் நீடித்துக்கொண்டே இருக்கின்றன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version