இலங்கை

வெளிநாட்டில் விடுதலைப் புலி தலைவர்களை சந்தித்தாரா ஜனாதிபதி அனுர; குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை!

Published

on

வெளிநாட்டில் விடுதலைப் புலி தலைவர்களை சந்தித்தாரா ஜனாதிபதி அனுர; குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை!

 ஜனாதிபதி அநுர, ஜெர்மனியில் வைத்து தமிழீழ விடுதலைப் புலி தலைவர்களை சந்தித்தார் என  உதய கம்மன்பில  ஊடகங்களிடம் கூறியதாகவும் இந்த கூற்றுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அண்மைய ஜெர்மனி விஜயம் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் விரைவில் உதய கம்மன்பிலவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய ஜெர்மனி விஜயத்தின் போது, பொதுமக்களைத் தூண்டும் நோக்கில் இணையத்தில் தவறான தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

இதனை  கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டது.

ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் ஜி. சுபாஷ் சமிந்த ரோஷன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.      

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version