சினிமா

” இலங்கையில் படம் எடுத்தால் நிச்சயம் நடிப்பேன்..” மோகன்லால் பேட்டி

Published

on

” இலங்கையில் படம் எடுத்தால் நிச்சயம் நடிப்பேன்..” மோகன்லால் பேட்டி

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய “தொடரும்” மற்றும் “எம்புரான்” திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. தொடர்ந்தும் பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கும் இவர் தற்போது இலங்கைக்கு சென்றுள்ளார்.அங்கு பாராளுமன்றம் சென்று ஜனாதிபதியை சந்தித்ததாக அங்கு இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவருடன் இந்தியாவில் சினிமாதுறையினை வளர்ப்பதற்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இதைவிட இலங்கையில் ஒரு தயாரிப்பாளர் படம் எடுத்தால் நடிப்பீங்களா என்ற கேள்விக்கு நிச்சயமாக நடிப்பேன் அது தானே என்னோட வேலை என கூறியுள்ளார். மேலும் தனது வளர்ச்சிக்கு தன்னோடு நடித்த துணை நடிகர்களே காரணம் அவர்களை பார்த்து நடித்து தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கேன் என பெரிய மனதுடன் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version