இலங்கை

ஈரான் மீதான தாக்குதல் விடயத்தில் நழுவும் அரசாங்கம் ; அஷ்ரப் தாஹிர்

Published

on

ஈரான் மீதான தாக்குதல் விடயத்தில் நழுவும் அரசாங்கம் ; அஷ்ரப் தாஹிர்

ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதலை மனிதாபிமானத்தைக் கொண்ட எந்த ஒரு தரப்பும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்துரைத்த அவர், இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் கருத்துரைக்காவிட்டாலும் ஈரானுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

Advertisement

மாறாக இந்த விடயத்தில் அரசாங்கம் நழுவல் போக்கை கடைப்பிடிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது அரசாங்கத்துக்கு ஈரான் வழங்கிய உதவிகளை மறந்து விடக் கூடாது எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதேவேளை தொடர்ந்து கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் உதுமாலெப்பை, ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version