இலங்கை

எல்லைகளை தாண்டாமலே தாக்குதல் ; அதி உயர் ஏவுகணையை உருவாக்கும் இந்தியா!

Published

on

எல்லைகளை தாண்டாமலே தாக்குதல் ; அதி உயர் ஏவுகணையை உருவாக்கும் இந்தியா!

இந்தியா தனது இராணுவ சக்தியை மேம்படுத்தும் நோக்கில், அதி உயர் திறன் கொண்ட ஒரு புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கி வருகின்றது.

இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைக்கு ET-LDHCM என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இது மணிக்கு 11,000 கிலோமீற்றர் வேகத்தில் பறந்து, சுமார் 1,500 கிமீ வரம்புக்குள் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணையானது ஸ்க்ராம்ஜெட் இயந்திரம் மற்றும் ஸ்டெல்த் தொழில்நுட்பம் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிரி ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை தவிர்க்கும் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த ஏவுகணையை தெற்கு பஞ்சாப்,டெல்லி போன்ற இடங்களில் இருந்து இந்திய விமானப்படையின் சுகோய் மற்றும் ரஃபேல் போர் விமானங்கள் மூலம் ஏவ முடியும் எனவும், இதனால் இந்தியா எதிரி எல்லைகளை தாண்டாமலே தாக்குதல் நடத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version