இலங்கை

கட்டு கட்டாக மீட்கப்பட்ட பணம் ; கைதான நால்வர்

Published

on

கட்டு கட்டாக மீட்கப்பட்ட பணம் ; கைதான நால்வர்

மத்தேகொடை பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் நான்கு சந்தேக நபர்கள் மத்தேகொடை பொலிஸாரால் நேற்று (19) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மத்தேகொடை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கைதுசெய்யப்பட்டவர்கள் பன்னிபிட்டிய, பாணந்துறை மற்றும் தும்பர ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 18, 20, 24 மற்றும் 44 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 3377 லீற்றர் கோடா, 101 லீற்றர் 250 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனை மூலம் சம்பாதித்த 2,507,740 ரூபா பணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்தேகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version