இலங்கை

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் பதற்ற நிலை

Published

on

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் பதற்ற நிலை

  கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியசாலை பணியாளர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலை பணியாளர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தற்போது காணொளிகளாக சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

Advertisement

வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளிகள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதால் இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மருந்துகளை பெறுவதற்கு தாமதம் ஏற்படுவதாகவும், மருந்துகளை பெறுவதற்கு ஒழுங்கான வரிசை முறைமை இல்லை எனவும், வைத்தியரின் ஆலோசனைகளை பெறுவதற்கு வரிசையில் காத்திருக்கும் போது அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் நோயாளிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலை பணியாளர்கள் தங்களது கடமைகளை சரியாக செய்யாததால் வரிசைகளில் காத்திருக்கும் நோயாளிகளுக்கு இடையில் வாக்குவாதங்கள் ஏற்படுவதாக நோயாளிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இந்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை வட்டாரங்கள் உத்தியோகபூர்வமாக எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version