இலங்கை

கைலாசா எங்கே உள்ளது; நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய நித்தியானந்தாவின் சீடர்

Published

on

கைலாசா எங்கே உள்ளது; நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய நித்தியானந்தாவின் சீடர்

சுவாமி நித்தியானந்தா வசிக்கும் கைலாசா நாடு எங்குள்ளது என்ற தகவலை நித்தியானத்தாவின் சீடர் வெளிப்படுத்தியுள்ளார்.

கைலாசா நாட்டில் இருப்பதாக கூறும் சுவாமி நித்தியானந்தா தமிழகத்தின் மதுரை ஆதின மடத்துக்குள் நுழையக்கூடாது என்று தனி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

Advertisement

இதனை எதிர்த்து நித்யானந்தா மதுரை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கைலாஷா நாடு எங்கு உள்ளது,

அங்கு எப்படி செல்வது, நித்யானந்தா எங்கு உள்ளார், கைலாஷா நாட்டுக்கு செல்வதற்கு விசா, பாஸ்போர்ட் வேண்டுமா உள்ளிட்ட பல கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியது.

Advertisement

நீதிம்ன்றின் கேள்விகளுக்கு நித்யானந்தாவின் தரப்பில் ஆஜரான அவரது சீடர் அரச்சனா பதலளிக்கையில்,

ஆஸ்திரேலியா அருகே யுஎஸ்கே என்கிற கைலாசா ஐக்கிய நாடு என்ற தனி நாட்டில் நித்யானந்தா வசித்து வருகிறார்.
இந்த நாடு ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாடு எனத் தெரிவித்தார்.

மேலும், நித்யானந்தா தரப்பில் புதிய வழக்கறிஞரை நியமிக்க அனுமதி கோரியதை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை, வழக்கை ஒத்திவைத்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version