இலங்கை
செம்மணிப் புதைகுழிக்காக நீதிகோரி போராட்டம் முன்னெடுப்பு!
செம்மணிப் புதைகுழிக்காக நீதிகோரி போராட்டம் முன்னெடுப்பு!
செம்மணிப் புதைகுழிக்கு நீதியான விசாரணை நடாத்தபடவேண்டும் உண்மை கண்டறியபடவேண்டும் என கோரி வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் கவனவீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் பொழுது அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர் .
இலங்கை அரசே எம்மிடம் இருந்த வலிந்து அபகரிக்கபட்டு படுகொலை செய்யப்பட்டு மனித புதைகுழிகளில் புதைக்கப்பட்ட எமது அன்புக்குரியோரின் பெறுமதி மிக்க நீதி கோருகின்றோம். எனும் தொனிப்பொருளில் வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் செம்மணியில் இன்று காலை 10 மணிமுதல் கவனவீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
நீதி வேண்டும் நீதி வேண்டும், செம்மணி படுகொலைக்கு நீதி வேண்டும், ஐ.நா செவி கொடு ஜனாதிபதி கண்விழி, மனித உரிமையை பாதுகாப்பீர் ,புதைகுழிகள் அடைக்கலம் அல்ல உண்மை பேசும் தளங்கள் ,விசாரணையை துரிதபடுத்து, செம்மணிக்கா ஒரு நீதி பட்டலந்தவுக்கு ஒரு நீதியா ஆகிய கோஷங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பொழுது பாதிக்கப்பட்ட தரப்பினர் பொதுமக்கள் வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் மதகுரு தலைவர்கள் அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்