இலங்கை

துஷ்பிரயோக வழக்கில் சிறைச்சாலையிலிருந்த கைதி தப்பி ஓட்டம்

Published

on

துஷ்பிரயோக வழக்கில் சிறைச்சாலையிலிருந்த கைதி தப்பி ஓட்டம்

கண்டியில் அமைந்துள்ள பல்லேகெலே திறந்தவெளி சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பல்லேகெலே பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (20) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற கைதி பொலன்னறுவை – கதுருவெல பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஒருவன் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லேகெலே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version