சினிமா

நடிக்காதடா.! கோபியின் பாசத்தைக் கலாய்த்த ஈஸ்வரி; பாக்கியா வீட்டில் நடக்கும் விசேஷம்…

Published

on

நடிக்காதடா.! கோபியின் பாசத்தைக் கலாய்த்த ஈஸ்வரி; பாக்கியா வீட்டில் நடக்கும் விசேஷம்…

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா ஈஸ்வரியைப் பாத்து இண்டைக்கு இனியாவோட birth day shoppingக்கு போகணும் என்று சொல்லுறார். அதுக்கு ஈஸ்வரி பரவாயில்லையே வேலை பிசியில நீ இனியாவோட பிறந்தநாளை எல்லாம் மறந்திருப்ப என்றெல்லோ நினைச்சேன் என்கிறார். அதைக் கேட்ட பாக்கியா எப்புடி அத்தை பிறந்தநாளை மறப்பேன் என்று சொல்லுறார். இதனை அடுத்து கோபி ஈஸ்வரியைப் பாத்து அம்மா சாரி என்னை மன்னிச்சிருங்க என்கிறார்.அதைக் கேட்ட ஈஸ்வரி என்கிட்ட வந்து ஒன்னும் பேச வேணாம் என்று சொல்லுறார். அதுக்கு கோபி என்னம்மா பேசாத என்றால் உங்ககிட்ட பேசாம நான் வேற யாருகிட்ட பேசுவேன் என்கிறார். இதனை அடுத்து ஈஸ்வரி கோபியைப் பாத்து டேய் நடிக்காதடா இப்புடி நடிச்சு என்னை ஏமாத்திக்கொண்டிருக்காத என்று சொல்லுறார். பின் கோபி நீங்க கதைக்காதது எனக்கு நெஞ்சு வலியே வந்த மாதிரி இருந்திச்சு என்று சொன்னதைக் கேட்டவுடனே ஈஸ்வரி கதைக்கிறார்.அதனைத் தொடர்ந்து இனியா பாக்கியா வீட்ட வந்து நிக்கிறார். அதைப் பார்த்தவுடனே அங்கிருந்த எல்லாரும் சந்தோசப்படுகிறார்கள். பின் பாக்கியாவும் இனியாவும் shopping பண்ணுறதுக்கு கிளம்புறார்கள். இதனை அடுத்து  கோபி இனியாவுக்காக diamond மோதிரம் வாங்கிக் கொடுக்கிறார். அதைப் பார்த்து இனியா சந்தோசத்தில் குதூகலிக்கிறார்.அத்துடன் இனியா இந்த மாதிரியான best பிறந்தநாளை நான் பார்த்ததே இல்ல என்று சொல்லுறார். அதனைத் தொடர்ந்து கவுன்சிலர் ரெஸ்டாரெண்டுக்கு வந்து உங்கட புண்ணியத்தில் என்ட wife நல்லா இருக்கிறாள் என்று பாக்கியாவைப் பாத்துச் சொல்லுறார். பின் ரெஸ்டாரெண்டில இனிமேல் யாராவது பிரச்சனை பண்ணால் என்கிட்ட சொல்லுங்க என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version