சினிமா
பழி என்மீதே வருகிறது என்ன செய்ய? பாடலாசிரியர் வைரமுத்து கொடுத்த விளக்கம்..
பழி என்மீதே வருகிறது என்ன செய்ய? பாடலாசிரியர் வைரமுத்து கொடுத்த விளக்கம்..
பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன், பின்னணி பாடகி சின்மயிக்கு ஆதவராக பேசிய விஷயம் பலரது கவனத்தை ஈர்த்தது. அதிலும், சின்மயி விஷயத்தில் அவர் நடந்து கொண்ட செயலை கண்டித்து வெளிப்படையாக கருத்தினை முன்வைத்தார் கங்கை அமரன். மேலும், வைரமுத்துவை நாங்கள் பாரதிராஜாவிடம் அறிமுகம் செய்யவில்லை என்றால் அவர் இப்போது இருந்திருக்கமாட்டார் என்று கங்கை அமரன் பேசியிருந்தார்.சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய வைரமுத்துவிடம், கங்கை அமரன் பேசியதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு வைரமுத்து, முடிந்த கதை, தொடர வேண்டாம் என்பது என்னுடைய வேண்டுகோள் என்று பதிலளித்துள்ளார். மேலும், பாடல்களில் திருத்தம் செய்யமாட்டேன் என்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்திருக்கிறார்.வைரமுத்து அவரின் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த அந்த பதிவில், என்மீது ஒரு பழி உண்டு, பாடல்களில் திருத்தம் கேட்டால் செய்யமாட்டேன் என்று. அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. திருத்தத்திறுக்கு ஒரு கருத்தமைதி வேண்டும். இருந்தால் அதற்கு நான் உடனே உடன்படுவேன், மாற்றியும் கொடுப்பேன், கொடுத்திருக்கிறேன்.புன்னகை மன்னன் படத்தில் வான் மேகம் பூப்பூவாய்த்தூவும் என்ற பாட்டு மழையில் நனையும் ஒரு மான் குட்டி தன் கவிதையால் மழையை குளிப்பாட்டும் பாட்டு, ’மழைத்துளி தெறித்தது எனக்குள்ளே குளித்தது நினைத்தது பலித்தது உயிர்த்தலம் சிலிர்த்தது’ என்று எழுந்தியிருந்தேன்.அதற்கு இசையமைப்பாளர், ’உயிர்த்தலம்’ என்பதை மட்டும் மாற்றிக் கொடுங்கள் என்று கூறியதற்கு, ஏன் என்று கேட்டேன். நீங்கள் எழுதிய பொருளில், புரிந்துக்கொள்ளாமல் அதைப் பெண்ணுறுப்போடு சம்பந்தப்படுத்தி பிரச்சனை செய்வார்கள் என்றார்.சிந்தித்தபோது சரி என்று பட்டது, உடனே நினைத்தது பலித்தது குடைக்கம்பி துளிர்த்தது என்று மாற்றிக்கொடுத்தேன் என்று ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.