இலங்கை
160 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!
160 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!
யாழ்ப்பாணத்தில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட குற்ற தடுப்பு பிரிவின் போதை குற்றதடுப்புக்கு பொறுப்பாகவுள்ள பொலிஸ் குழுவினராலேயே இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மானிப்பாய் சுதுமலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
கைதான சந்தேகநபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்றையதினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.