இலங்கை

இலங்கைக்கு தோட்டாவுடன் வந்த இந்திய பிரஜை ; அதிகாரிகள் அதிர்ச்சி

Published

on

இலங்கைக்கு தோட்டாவுடன் வந்த இந்திய பிரஜை ; அதிகாரிகள் அதிர்ச்சி

  கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தோட்டாவுடன் இந்திய பிரஜை ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் இன்று (21) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் 30 வயதுடைய இந்திய பிரஜை ஒருவர் ஆவார்.

Advertisement

சந்தேக நபர் குவைத்திலிருந்து இன்று காலை 06.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது விமான நிலைய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதியிலிருந்து ரி – 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டா ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் குவைத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளதாகவும் பணியில் இருக்கும் போது தரையில் விழுந்து கிடந்த தோட்டா ஒன்றை இவ்வாறு எடுத்து வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸாரால் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version