இலங்கை

இளம் குடும்ப பெண்ணுக்கு எமனான எரிபொருள் பவுசர்; வீதியில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்

Published

on

இளம் குடும்ப பெண்ணுக்கு எமனான எரிபொருள் பவுசர்; வீதியில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்

புத்தளம் , பாலாவி – கற்பிட்டி வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழத்துள்ளார்.

பாலாவி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய அபூதாலிப் பாத்திமா ரிஸானா எனும் ஒரு பிள்ளையின் தாயே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

Advertisement

பாலாவி ஊடாக கற்பிட்டி நோக்கி சென்று கொண்டிருந்த எரிபொருள் பவுசர் ஒன்று, வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த குறித்த பெண் மீது மோதியுள்ளது.

விபத்தில் பெண் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டதுடன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

உயிழந்த பெண்ணின் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், சம்பவ இடத்திலும், வைத்தியசாலையிலும் மரண விசாரணையை நடத்தினார்.

விபத்துச் தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version