இலங்கை

இஸ்​ரேல் மீது கொத்து குண்​டு​களை வீசிய ஈரான் ; அதிப​யங்கர தாக்​குதல்!

Published

on

இஸ்​ரேல் மீது கொத்து குண்​டு​களை வீசிய ஈரான் ; அதிப​யங்கர தாக்​குதல்!

  இஸ்​ரேல் – ஈரான் போர் நேற்று 8-வது நாளாக நீடித்த நிலை​யில், இஸ்​ரேல் மீது ஈரான் கொத்து குண்​டு​களை வீசி அதிபயங்கர தாக்​குதலை நடத்தியுள்ளமை போர் பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது.

இஸ்​ரேலின் மத்​திய பகு​திகளில் மக்​கள் அதி​கம் வசிக்​கும் இடங்​களை குறி​வைத்து ஈரான் கடந்த 19 ஆம் திகதி கொத்து (கிளஸ்​டர்) குண்​டு​களை வீசி​ய​தாக, அமெரிக்​கா​வில் உள்ள இஸ்​ரேல் தூதரகம் தெரி​வித்​தது.

Advertisement

சுமார் 8 கி.மீ. சுற்​றளவு வரை கடும் சேதத்தை ஏற்​படுத்​தக்​கூடிய கொத்து குண்​டு​களை இஸ்​ரேல் மீது ஈரான் பயன்​படுத்​து​வது இதுவே முதல் முறை ஆகும்.

ஈரான் வீசிய கொத்து குண்​டு​களால், இஸ்​ரேல் தலைநகர் டெல்​அ​விவ் உட்பட பல்​வேறு பகு​தி​களில் பிரம்​மாண்ட கட்​டிடங்​கள் சரிந்து கிடப்​ப​தாக தகவல்​கள் தெரிவிக்​கின்​றன.

இஸ்​ரேலின் துறை​முக நகர​மான ஹைபா மற்​றும் டான் மாவட்டங்​கள் உட்பட பல பகு​தி​கள் மீது ஈரான் நேற்று சரமாரி​யாக ஏவு​கணை​களை வீசி​யது.

Advertisement

சைரன் ஒலி எழுப்​பியதும் மக்​கள் பதுங்கு குழிகளி​லும், வணிக வளாகங்​களின் கார் பார்க்​கிங் பகு​தி​களி​லும் சென்று பதுங்​கினர். ஈரான் வீசிய ஏவு​கணை​கள் பல கட்​டிடங்​கள் மீது விழுந்து வெடித்​தன.

பீர் சேவா நகரில் உள்ள மைக்​ரோ​சாஃப்ட் அலு​வலக கட்​டிடம் மீது ஈரான் ஏவு​கணை விழுந்து வெடித்​த​தில், பலர் காயம் அடைந்​தனர்.

இரு நாடு​கள் இடையே பதற்​றத்தை தணிக்​கும் வித​மாக, ஜெனி​வா​வில் நடை​பெறும் பேச்​சு​வார்த்​தைக்கு வரு​மாறு ஈரான் வெளி​யுறவு துறை அமைச்​சர் அப்​பாஸ் அராகசிக்கு ஐரோப்​பிய நாடு​களின் அதி​காரி​கள் அழைப்பு விடுத்​துள்​ளனர்.

Advertisement

அதோடு இரு நாடு​களும் கட்​டுப்​பாட்​டுடன் நடந்து கொள்ளுமாறு பிரான்​ஸ், ஜெர்​மனி, இங்​கிலாந்து ஆகிய நாடு​களின் அமைச்​சர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

போர் நீடித்து வரும் நிலை​யில், ஐ.நா. பாது​காப்பு கவுன்​சிலின் அவசர கூட்​டத்தை கூட்​டு​மாறு ஈரான் மற்​றும் அதற்கு ஆதரவு தெரிவிக்​கும் ரஷ்​யா, சீனா மற்​றும் பாகிஸ்​தான் ஆகிய நாடு​கள் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளன.

Advertisement

தனால், ஐ.நா. பாது​காப்பு கவுன்​சிலின் 2-வது அவசர கூட்​டம் விரை​வில் நடை​பெறும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதற்​கிடையே,அமெரிக்​கா,பிரிட்​டன், பிரான்ஸ், ஜெர்​மனி, கனடா, ஆஸ்​திரேலியா உள்​ளிட்ட நாடு​கள் இஸ்​ரேலுக்கு ஆதர​வாக உள்​ளன.

கொத்து (கிளஸ்டர்) குண்டு, மற்ற ஏவுகணைபோல ஒரே முறையில் வெடிப்பது அல்ல. இலக்கை நெருங்கியதும், தரையில் இருந்து 7 கி.மீ. உயரத்தில் வெடிக்கும். அப்போது அதில் இருந்து வெளியேறும் ஏராளமான சிறு சிறு குண்டுகள் 8 கி.மீ. சுற்றளவுக்கு சிதறி விழுந்து, ஒவ்வொன்றும் தனித்தனியாக வெடிக்கும். குடியிருப்பு பகுதிகளில் இந்த குண்டு விழும்போது, அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

Advertisement

கொத்து குண்டுகள் தரையில் விழுந்து வெடிக்காமல் கிடந்தாலும் ஆபத்துதான். வெடிக்காமல் கிடக்கும் கொத்து குண்டுகளை, யாராவது தொட்டாலோ,மிதித்தாலோ கண்ணிவெடி போல பயங்கரமாக வெடிக்கும்.

எனவே, ‘தரையில் கிடக்கும் சந்தேகத்துக்குரிய பொருட்களை தொட வேண்டாம். அது போன்ற பொருட்களை பார்த்தால், அவசர உதவி எண் ‘100’-க்கு போன் செய்ய வேண்டும் என மக்களுக்கு இஸ்ரேல் அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதேவேளை இலங்கையில் 2009 ஆண்டு இறுதிப்போரில் இலங்கை இராணுவத்தினர் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version