இலங்கை
இ.போ.ச பேருந்தில் மோதி கோர விபத்தில் சிக்கிய முச்சக்கரவண்டி ; ஒருவர் பலி
இ.போ.ச பேருந்தில் மோதி கோர விபத்தில் சிக்கிய முச்சக்கரவண்டி ; ஒருவர் பலி
இரத்தினபுரியில் குருவிட்ட, கதன்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (21) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.