இலங்கை
சாரதியின் மது போதையால் நால்வருக்கு நேர்ந்த சோகம்
சாரதியின் மது போதையால் நால்வருக்கு நேர்ந்த சோகம்
குருணாகல், ஹெட்டிப்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (20) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கார் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மதில் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தின் போது காரில் பயணித்த நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது, காரின் சாரதி மது போதையில் இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.