இலங்கை

தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டி; மன்னார் மாணவி வரலாற்றுச் சாதனை

Published

on

தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டி; மன்னார் மாணவி வரலாற்றுச் சாதனை

  தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மன்னார் மாணவி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 8,9 ல் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி செல்வி. அ. நயோலின் அப்றியானா சாதனை படைத்துள்ளார்.

Advertisement

அதன்படி மாணவி செல்வி. அ. நயோலின் மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தையும், தேசிய மட்ட ஒலிம்பியாட் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்டப் போட்டியில் முதலாம் இடத்தையும், மஹரகம ஜனாதிபதி கல்லூரியில் கடந்த ஆவணி மாதம் நடைபெற்ற தேசிய மட்ட ஒலிம்பியாட் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்று வரலாற்று சாதனை புரிந்துள்ளார்.

அவருக்குரிய சான்றிதழ் கல்வி அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை (20) கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் டாக்டர் மதுர செனவிரத்ன ( Dr Madhura Senevirathna) அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Advertisement

இவருடன் வட மாகாணத்தை சேர்ந்த இரு மாணவர்கள் இரண்டு இரண்டாம் நிலைகளைப் பெற்றுள்ளனர்.      

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version