இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த ஆபத்தான பொருட்கள் மீட்பு

Published

on

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த ஆபத்தான பொருட்கள் மீட்பு

கொழும்பு -முகத்துவாரம், லெல்லம பகுதியில் 7 கிலோ கிராம் ஹஷிஷுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைத்த தகவலின்படி, நேற்று அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

மேலும் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யத் வைத்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள், 9 கிலோ கிராம் ஹஷிஷ் மற்றும் 750 கிராம் கேரள கஞ்சா ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

போதைப்பொருளின் மொத்த பெறுமதி 175 மில்லியன் ரூபாய் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் சந்தேக நபர் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version