உலகம்

பிரேசிலில் நடுவானில் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் மரணம்

Published

on

பிரேசிலில் நடுவானில் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் மரணம்

பிரேசில் நாட்டின் தென் மாநிலமான சான்டா கட்டேரினாவில் செயின்ட் ஜானை போன்ற கத்தோலிக்க செயின்ட்களை கொண்டாடும் விழா ஜூன் மாதத்தில் நடைபெறும். இந்த விழாவின் ஒரு பகுதியாக ராட்சத பலூன் மூலம் மக்கள் ஆகாயத்தில் பறப்பார்கள்.

பிரையா கிராண்டு என்பது இந்த ராட்சத பலூன் பறப்பதற்கு ஏற்ற இடம் திகழ்ந்து வருகிறது.

Advertisement

இன்று சான்டா கட்டேரினா மாநிலத்தில் ராட்சத பலூனில் 29 பேர் பறந்து கொண்டிருந்தனர். 

வானில் பறந்து கொண்டிருக்கும்போது, பலூன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பலூன் முழுவதுமாக எரிந்து, மக்கள் நின்று கொண்டிருக்கும் தொட்டி கீழே விழுந்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயம் அடைந்தனர். 

காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement

கடந்த வாரம் சனிக்கிழமை இதுபோன்ற ராட்சத பலூன் விழுந்ததில் 27 வயது பெண் ஒரவர் உயிரிழந்தார். 11 பேர் காயம் அடைந்தனர்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version