சினிமா
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெடித்த பூகம்பம்.! ரோகிணியை தாறுமாறாக அடித்த விஜயா.!
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெடித்த பூகம்பம்.! ரோகிணியை தாறுமாறாக அடித்த விஜயா.!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, Birth Day கொண்டாட்டத்தில சிந்தாமணி ஒரு நகை கடைக்காரர் குடும்பத்தை விஜயாவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அந்த அம்மா விஜயாவோட செயினைப் பாத்திட்டு இதை நீங்க எங்க வாங்கினீங்க என்று கேட்க்கிறார். அதுக்கு விஜயா அது என்னோட மருமகள் வாங்கி கொடுத்தால் அவள் மிகப்பெரிய கோடீஸ்வரி என்கிறார். இதனை அடுத்து அந்த நகை கடைக்கார அம்மா சிந்தாமணியை கூப்பிட்டு பாட்டை முதலில நிப்பாட்ட சொல்லு என்கிறார். மேலும் விஜயாவோட செயினைப் பாத்து இது என்னோடது மாதிரி இருக்கு என்று சொல்லுறார். அதுக்கு பார்வதி ஒரே மாதிரி designல நிறைய செயின் இருக்கும் என்கிறார். அதுக்கு அந்த நகை கடைக்கார அம்மா இல்ல இது என்னோடது தான் அந்த செயினில கூட ஒரு கல் மிஸ் ஆகியிருக்கும் என்கிறார்.பின் அந்த நகைக்கடைக்கார அம்மா என்னோட செயினை ஒரு திருடன் திருடிக்கொண்டு போய்ட்டான். அந்த நகை தான் இது என்கிறார். மேலும், இப்பவெல்லாம் பொம்பிளைங்க தான் நகைகளை திருடுறாங்க என்று சொல்லி அந்த அம்மா பொலீஸை கூப்பிடப்போறேன் என்கிறார். அதுக்கு சிந்தாமணி பிறந்தநாள் அன்று எதுக்கு பொலீஸை எல்லாம் கூப்பிட்டுக் கொண்டு என்று சொல்லி விஜயாட இருந்த நகையை வாங்கிக் அந்த அம்மாட கொடுக்கிறார். இதனை அடுத்து விஜயா அங்கிருந்து கிளம்புறார். பின் ரோகிணி விஜயாவுக்கு புடவை வாங்கிக் கொடுக்கிறார். அதுக்கு விஜயா இது வாங்கினதா இல்ல திருடினதா என்று கேட்க்கிறார். பின் விஜயா ரோகிணியை போட்டு அடிச்சுக் கொண்டிருக்கிறார். அதைப் பார்த்து வீட்டில இருக்கிற எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். பின் நடந்ததெல்லாத்தையும் விஜயா வீட்டில இருக்கிற ஆட்களிட்ட சொல்லுறார். அதுக்கு ரோகிணி தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லி அழுகுறார். இதுதான் இன்றைய எபிசொட்.