இலங்கை

போரில் ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் செலவு செய்யும் இஸ்ரேல்

Published

on

போரில் ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் செலவு செய்யும் இஸ்ரேல்

  ஈரான் மீதான போரில் ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் இஸ்ரேல் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி மையங்கள், ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது.

Advertisement

அதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஈரானும் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல்-ஈரான் நாடுகளுக்கு இடையேயான போரில் அமெரிக்காவும் களமிறங்கும் சூழல் ஏற்படும் அளவுக்கு போர் பெரிதாகி விட்டதாக உலக நாடுகள் கூறுகின்றன.

இந்த நிலையில், ஈரான் மீதான போரில் இஸ்ரேலின் செலவு குறித்த விவரங்களை இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ளது.

Advertisement

இதன்படி இந்த போருக்காக ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை இஸ்ரேல் செலவு செய்வது தெரியவந்துள்ளது.

ஈரான் மீதான தற்போதைய போர் சூழலில், ராணுவ நடவடிக்கைகளுக்காக ஒரு நாளுக்கு ஒரு பில்லியன் டாலர்  செலவிடப்படுவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தலைமை தளபதியின் முன்னாள் நிதி ஆலோசகர் ரீம் அமினாச் தெரிவித்தார்.

  மேலும் உள்கட்டமைப்பு சேதம், உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஆகியவற்றை செலவுக் கணக்கில் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version