இலங்கை
முதல் விமானப் பயணத்தை ஆரம்பித்த ஏர் பஸ் ஏ330-200 விமானம்
முதல் விமானப் பயணத்தை ஆரம்பித்த ஏர் பஸ் ஏ330-200 விமானம்
ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தால், புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஏர் பஸ் ஏ330-200 விமானம் இன்று தமது முதல் விமானப் பயணத்தை ஆரம்பித்தது.
அதன்படி, குறித்த விமானம், இன்று மதியம் 1.48க்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மாலைத்தீவு – மாலே சர்வதேச விமான நிலையத்தை நோக்கி பயணமானதாக ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விமானம், கடந்த 4ஆம் திகதி பிரான்ஸிருந்து கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.