இலங்கை

யாழ் இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தர் பலியான விபத்தில் மற்றுமொருவர் பலி

Published

on

யாழ் இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தர் பலியான விபத்தில் மற்றுமொருவர் பலி

கடந்த மாதம் 26 ஆம் திகதி ஓமந்தைப் பகுதியில் டிப்பர் வாகனத்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்திருந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

இந்தியாவுக்கு தல யாத்திரை மேற்கொண்டு விட்டு யாழ்ப்பாண நோக்கி கார் ஒன்றில் திரும்பிக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய
உயர்ஸ்தானிகராலயத்தில் கலாச்சார உத்தியோதராக கடமை ஆற்றி வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Advertisement

அதன் பின்னர் அவரது மகனும் உயிரிழந்தார்.

இதில் படுகாயம் அடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு 15 ஐ சேர்ந்த துரைச்சாமிக்குருக்கள் சுவாமிநாதஐயர் (வயது 69) என்பவர் நேற்று (20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. மேலும் பெண் ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version