இலங்கை

லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; ஒருவர் பலி

Published

on

லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; ஒருவர் பலி

மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பதுளை-மஹியங்கனை வீதியில் 19ஆவது தூண் அருகே வாகன விபத்து ஒன்று சம்பவித்துள்ளது.

பதுளையிலிருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன்  மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

Advertisement

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் மஹியங்கனை மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை லொறியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version