இலங்கை

வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டா போதும் சுகர் லெவலை ஈஸியா குறைக்கலாம்!

Published

on

வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டா போதும் சுகர் லெவலை ஈஸியா குறைக்கலாம்!

இன்றைய அவசர உலகில் நீரிழிவு நோய் ஒரு பொதுவான ஆனால் தீவிரமான நோயாக மாறிவிட்டது. நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்வது அவசியம்.

சில குறிப்பிட்ட உணவுகளை வெறும் வயிற்றில் உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

Advertisement

சியா விதைகள் (Chia Seeds) : சியா விதைகளில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இவற்றை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். அவற்றில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது செரிமான செயல்முறையை மெதுவாக்கி குளுக்கோஸை மெதுவாக வெளியிடுகிறது. இது திடீர் இரத்த சர்க்கரை அதிகரிப்பை ஏற்படுத்தாது. மேலும் உடலில் இது ஆற்றலையும் அதிகரிக்கின்றது. 

தேங்காய் எண்ணெய் (Coconut Oil): தேங்காயில் மீடியம் செயின் ட்ரைகிளிசரைடுகள் (MCTs) உள்ளன. இது இரத்த சர்க்கரையை அதிகரிக்க அனுமதிக்காது. ஆகையால், நீரிழிவு நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன் வர்ஜின் தேங்காய் எண்ணெய் அல்லது சில உலர்ந்த தேங்காய் துண்டுகளை சாப்பிடுவது நன்மை பயக்கும். இவை உடலின் வளர்சிதை மாற்றத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.

Advertisement


பாதாம் (Almonds):
 பாதாமில் புரதச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளன. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. சுகர் நோயாளிகள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதும் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கிறது.


கருப்பு திராட்சை (Prunes):
 கருப்பு திராட்சை அல்லது கொடிமுந்திரி சாப்பிட ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அவற்றில் ஏராளமான நார்ச்சத்து உள்ளது. அவை செரிமானத்தை மேம்படுத்தி இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கின்றன. இருப்பினும், அவற்றை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version