இலங்கை
ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்களை தாக்கிய அமெரிக்கா
ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்களை தாக்கிய அமெரிக்கா
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா ஈரானை தாக்கி, ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய இடங்களில் உள்ள மூன்று அணுசக்தி தளங்களைத் தாக்கியதாக டொனால்ட் டிரம்ப் அவரது எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்துள்ளார்.
இப்பதிவில் மேலும் கூறியதாவது,
“ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் உள்ளிட்ட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீதான எங்கள் மிக வெற்றிகரமான தாக்குதலை நாங்கள் முடித்துவிட்டோம்,” என்று டிரம்ப் இன்று சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார்.”
அனைத்து விமானங்களும் இப்போது ஈரானின் வான்வெளிக்கு வெளியே உள்ளன. குண்டுகளின் முழு சுமையும் முதன்மை தளமான ஃபோர்டோவில் வீசப்பட்டது,” எனவும் பதிவில் வெளியிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை அமெரிக்காவை ஈரானுடன் நேரடி ஆயுத மோதலில் ஆழ்த்துகிறது, இது தெஹ்ரானின் அணுசக்தி திட்டத்தை முடக்கி அதன் ஆட்சியைக் கவிழ்க்கும் இஸ்ரேலின் முயற்சியில் அதன் ஈடுபாட்டில் ஒரு பெரிய அதிகரிப்பு ஆகும்.