இலங்கை
குமண தேசிய பூங்காவில் குவிந்துள்ள பக்தர்கள்
குமண தேசிய பூங்காவில் குவிந்துள்ள பக்தர்கள்
கதிர்காம பாதயாத்திரையில் காட்டு பாதையில் 2025/06/20 முதல் 2025/06/21 வரை 16018 பேர் குமண தேசிய பூங்காவில் யாத்திரை களத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆண்டு மொனராகல மாவட்ட கதிர்காம கந்தனின் தீர்த்த உற்சவ திருவிழாவில் அதிகளவான பக்தர்கள் புனித பாதயாத்திரையாக செல்கின்றனர்.
இதில் குமண தேசிய பூங்காவின்
நேற்று காலை 06.00Am முதல் பிற்பகல் 4.00Pm வரை யாத்திரை சென்றவர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆண் (18 வயதுக்கு மேல்) – 2991, ஆண் (18 வயதுக்கு கீழ்) – 331
பெண் (18 வயதுக்கு மேல்) – 2063, பெண் (18 வயதுக்கு கீழ்) – 189
மொத்தமாக 5574 பேர் யாத்திரை சென்றுள்ளனர்.
தொடக்கத்தில் இருந்தே பூங்கா நுழைவாயில் வழியாக இரண்டு நாட்களில் நுழைந்த பக்தர்களின் மொத்த எண்ணிக்கை 16018 பேர் என குறிப்பிடப்பட்டுள்ளது.