இலங்கை
சென்னை நோக்கி சென்ற இந்தியர் இலங்கையில் கைது ; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
சென்னை நோக்கி சென்ற இந்தியர் இலங்கையில் கைது ; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
பயணப்பொதியில் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்ட தோட்டாக்களுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த 30 வயதுடைவரே கைதாகியுள்ளார்.
குறித்த நபர் குவைத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்துக்கு வந்து, சென்னை நோக்கிப் பயணிக்கவிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.