இலங்கை

டேட்டிங் செயலி காதல் ; கருக்கலைப்புக்கு மிரட்டிய இளைஞர்

Published

on

டேட்டிங் செயலி காதல் ; கருக்கலைப்புக்கு மிரட்டிய இளைஞர்

மும்பையைச் சேர்ந்த 28 வயது பெண் மருத்துவர், டேட்டிங் செயலியில் அறிமுகமான 27 வயது இளைஞருடன் நட்பை ஆழப்படுத்திய நிலையில், கர்ப்பம் அடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தன்னை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாக அந்த இளைஞர் மீது அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

Advertisement

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அவர் கருக்கலைப்பை மறுத்ததற்கு, இளைஞர் தனியாக எடுத்த புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளதாக மருத்துவர் தெரிவித்தார்.

பயந்துவிட்ட அவர், கட்டாயமாக கருக்கலைப்பு செய்ததாகவும், பின்னர் இளைஞர் தொடர்பை முற்றிலும் தவிர்த்துவிட்டதாகவும் கூறினார்.

Advertisement

பின்னர் விசாரித்ததில், அந்த இளைஞருக்கு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்திருப்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், பெண் மருத்துவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தற்போது இளைஞர் மீது பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version