இலங்கை

யாழில் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மூவர் கைது

Published

on

யாழில் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மூவர் கைது

தலைமன்னாரிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாகப் படகுமூலம் செல்ல முயன்றதாகக் கூறப்படும் மூவர் தலைமன்னார் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த அவர்கள் யாழ்ப்பாணம், கோப்பாய், பருத்தித்துறை மற்றும் அச்சுவேலி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொலை, கொள்ளை, வாள்வெட்டு ஆகிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

அவர்கள் மூவரும் தலைமன்னாரில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல முயற்சித்தபோது, கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவருக்கும், உதவிய குற்றச்சாட்டில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version