சினிமா
வைரமுத்து செய்த செயலால் கண்கலங்கிப்போன இயக்குநர் ஷங்கர்!! இதுதான் காரணம்?
வைரமுத்து செய்த செயலால் கண்கலங்கிப்போன இயக்குநர் ஷங்கர்!! இதுதான் காரணம்?
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக திகழ்ந்து வரும் இயக்குநர் ஷங்கர், சமீபகாலமாக இயக்கிய படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.கேம் சேஞ்சர், இந்தியன் 2, 2.0 போன்ற படங்கள் வரிசையாக தோல்வியை சந்தித்து பல கோடி நஷ்டத்தையும் ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து வேள்பாரி நாவலை படமாக்க ஷங்கர் திட்டமிட்டிருக்கிறார். இப்படமாவது ஹிட்டாகுமா என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகிறார்கள்.இந்நிலையில், ஷங்கர் குறித்து பாடலாசிரியர் வைரமுத்து பேசிய விஷயங்கம் தற்போது டிரெண்டாகி வருகிறது. ஒருவிழாவில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து, எனக்கு பிரியமான ஒரு இயக்குநர், நான் எழுதிய பாடலை படமாக்கியப்பின் எனக்கு அந்த பாடலை போட்டுக்காட்டினார், வியந்துபோனேன்.மறுநாள் காலையில் அவரது வீட்டுக்குசென்று அவருடன் சந்தன மாலை அணிவித்தேன். அவர் நெகிழ்ந்துபோய் கண்களின் ஓரம் நீ கட்டி நின்றபடி, எதற்கு இந்த மரியாதை என்று கேட்டார். அதற்கு நான், என் தமிழை உலகத்தில் ஏழு அதிசயங்களிலும் ஒலிக்கச் செய்தீர்களே அதற்குத்தான் என்று சொன்னேன். அந்த பாடல் தான் பூவுக்குள் ஒளிந்திருக்கும் பாடல் என்று வைரமுத்து பேசியிருக்கிறார்.