இலங்கை

இலங்கையில் 2 தொன் ஹெரோயின் பறிமுதல்

Published

on

இலங்கையில் 2 தொன் ஹெரோயின் பறிமுதல்

கடந்த 5 மாதங்களில் சுமார் 2 தொன் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 26 ஆம் திகதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்குபற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இன்று வரை மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனைகள் குறித்து பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய கருத்து வௌியிட்டார்.

அதற்கமைய, இதுவரையான காலப்பகுதியில் 1,253 கிலோகிராம் ஹெராயினும் 2,121 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் 12,439 கிலோகிராம் கஞ்சாவும் 22 கிலோகிராம் கொக்கேய்ன்னும் 1.6 மில்லியன் போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version