இலங்கை

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

Published

on

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

கடந்த 24 மணி நேரத்தில் இராணுவ மோதல்கள் காரணமாக இலங்கையர்களிடையே எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என்று இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. 

 போர் சூழ்நிலை காரணமாக இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் மேலும் மூன்று இலங்கையர்கள் நாளை (24) எய்லாட் நகருக்குச் சென்று, தாபா எல்லை வழியாக கெய்ரோ விமான நிலையத்தை அடைந்து, நாடு திரும்பவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார். 

Advertisement

 மேலும், 12 பேர் நாடு திரும்புவதற்காக நேற்று தூதரகத்திற்கு வந்ததாகவும், அவர்களை எதிர்வரும் நாட்களில் நாட்டிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.

 இஸ்ரேலின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இலங்கைக்குப் பயணிக்க விரும்புவோருக்காக, ஜோர்தானின் அம்மானில் இருந்து இந்தியாவின் புது டெல்லிக்கு சேவையில் ஈடுபடும் இந்தியன் எயார்லைன்ஸ் விமானங்களில் சில இருக்கைகளை இலங்கையர்களுக்கு வழங்குவதாக இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version