உலகம்
ஈரான் அணு உலைகளில் அமெரிக்கா தாக்குதல்;
ஈரான் அணு உலைகளில் அமெரிக்கா தாக்குதல்;
மூளுமா மூன்றாம் உலகப்போர்?
ஈரானின் அணுஉலைகள் மீது நேற்று அதிகாலை அமெரிக்கா தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்கள் காரணமாக, மூன்றாம் உலகப் போர் ஏற்படும் அச்சம் தோற்றம் பெற்றுள்ளது என்று சர்வதேச அமைப்புகள் பலவும் கவலை தெரிவித்துள்ளன.
ஈரானின் போர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் பகுதிகளில் செயற்பட்ட அணு உலைகள் மீதே தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஈரானின் அணுகுண்டுச் செயற்றிட்டத்தில் 90 வீதமான பங்களிப்பை வழங்கிவரும் போர்டோ அணுஉலை தாக்கப்பட்டுள்ளமை பதற்றங்களையும், அணுக்கதிர்வீச்சுத் தாக்கம் ஏற்படலாம் என்ற ஐயப்பாடுகளையும் உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பரந்து பட்ட பதிலடி வழங்கப்படும் என்று ஈரா னிய இராணுவம் அறிவித்துள்ளதுடன், இஸ்ரேலின் வர்த்தக நகரமான டெல் அவிவ் மீது சரமாரியான ஏவுகணைத் தாக்குதல்களையும் மேற்கொண்டுவருகின்றது. ‘ஒவ்வொரு மணிநேரமும் குறைந்தது ஐந்து அல்லது ஆறு ஏவுகணைகள் டெல் அவிவ் மீது கணிசமான சேதத்தை ஏற்படுத்துகின்றன’ என்று சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இதற்கிடையே அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ஈரானுக்கு அணுவாயுதங்களை வழங்கவும், ஈரானுடன் இராணுவக் கூட்டணியை அமைக்கவும் வடகொரியாவில் உயர்மட்டக் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது என்று கூறியுள்ளார். ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரும் அமெரிக்காவைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.