இலங்கை
என் கணவர் அப்பாவி; மஹிந்தானந்தாவின் மனைவி கவலை
என் கணவர் அப்பாவி; மஹிந்தானந்தாவின் மனைவி கவலை
முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் மனைவியும், மறைந்த பிரதமர் டி.எம். ஜயரட்னவின் மகளுமான செனானி ஜெயரத்னா, ஊழல் வழக்கில் தனது கணவர் தண்டிக்கப்பட்டதை கண்டித்து சமூக ஊடகத் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
மஹிந்தானந்த அளுத்கமகேயின் அதிகாரப்பூர்வ பகிரப்பட்ட பதிவில் அவர்,
தனது கணவர் நிரபராதி என்றும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் சட்ட செயல்முறை அரசியல் ரீதியாக செல்வாக்கு செலுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
அதேநேரம், நீதி அமைச்சரின் அண்மைய கருத்தையும் அவர் கேள்வி எழுப்பினார், NPP ஆட்சியில் இல்லாவிட்டால் அத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டிருக்காது என்றும் மஹிந்தானந்தாவின் மனைவி சுட்டிக்காட்டினார்.
தனது கணவர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் மஹிந்தானந்தாவின் மனைவி குறிப்பிட்டார்.
ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அரசு நிதியில் இருந்து ரூ.53 மில்லியன் மோசடி செய்ததாக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அதேவேளை இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கும் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.