இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான இளைஞன்

Published

on

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான இளைஞன்

 சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று (22) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் கம்பஹா – நிட்டம்புவை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஆவார்.

Advertisement

சந்தேக நபர் வெளிநாட்டிலிருந்து நேற்றைய தினம் இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதியிலிருந்து 5000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 23 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version