பொழுதுபோக்கு

கோலங்கள் சீரியல் வில்லன் ஆதி ஞாபகம் இருக்கா? இந்த சீரியலுக்காக சூர்யா பட வாய்ப்பை கைவிட்டவர்!

Published

on

கோலங்கள் சீரியல் வில்லன் ஆதி ஞாபகம் இருக்கா? இந்த சீரியலுக்காக சூர்யா பட வாய்ப்பை கைவிட்டவர்!

வட இந்தியாவில் பிறந்து தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை தேவயானிக்கு சின்னத்திரையில் அடையாளம் கொடுத்த சீரியல் கோலங்கள். இந்த சீரியல் இவருக்கு மட்டும் அல்ல, இன்றும் பல நடிகர்களுக்கு அடையாளம் கொடுத்துள்ளது. அந்த வகையில் ஒரு முக்கிய நடிகராகவும், டப்பிங் கலைஞராகவும் இருப்பவர் தான் அஜய் கபூர். இந்த சீரியலில் ஆதி என்ற வில்லன் ரோலில் சிறப்பாக நடித்து பாராட்டுக்களை பெற்றிருந்தார்.90-ஸ் குழந்தைகளின் ஃபேவரெட் சீரியல்களில் ஒன்று கோலங்கள். வழக்கமான குடும்ப கதையை வித்தியாசமான கோணத்தில் திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கியது மட்டும் இல்லாமல் தொல்காப்பியன் என்ற கேரக்ரிலும் நடித்திருந்தார். தற்போது இவர் சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வரும் நிலையில், கோலங்கள் சீரியிலின் 2-ம் பாகம் விரைவில் வரும் என்று கடந்த சில மாதங்களாக தகவல் வெளியாகி வருகிறது.இந்த சீரியலில் ஆதி என்ற வில்லன் கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள நடிகர் அஜய் கபூர், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் சூர்யா நடித்த அயன் படத்தில் வில்லனாக நடிக்க வந்த வாய்ப்பை தவறவிட்டுள்ளார். இது குறித்து அவர் ஒரு நேர்கணலில் கூறியுள்ளார். இவர் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த சமயத்தில் தினமும் வாக்கிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி ஒருநாள் வாக்கிங் செல்லும்போது தான் கோலங்கள் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது,கோலங்கள் சீரியலில், தேவயானி அம்மா கேரக்டரில் நடித்திருந்த நடிகை சத்யபிரியா, கோலங்கள் சீரியலுக்கு வில்லன் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் பொய் பாருங்க என்று சொல்ல, அவரும் போய் இயக்குனர் திருச்செல்வத்தை சந்தித்துள்ளார். அப்படி இந்த வாய்ப்பு கிடைக்க, இவருக்கு டப்பிங் கொடுக்க, ஆட்களை பார்த்து ஒருவரது குரலும் சரியாக வரவில்லை என்பதால், இயக்குனர் திருச்செல்வம் அஜய் கபூரையே டப்பிங் பேசுமாறு கூறியுள்ளார். அப்படி கிடைத்த இந்த டப்பிங் வாய்ப்பு தமிழ் சினிமாவில் அஜய் கபூர் தனித்துவமாக குரலாக மாறியுள்ளார்.கோலங்கள் சீரியல் மூலம் எனக்கு, நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான அயன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கோலங்களில் பிஸியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனாலும் இந்த படத்தில் வில்லன் கேரக்டருக்கு டப்பிங் பேசியது நான்தான். மொத்த படத்தின் டப்பிங்கை ஒரே நாளில் பேசி முடித்ததால் என்னை பாராட்டிய இயக்குனர் உங்கள் குரல் தான் கமலேஷ் கேரக்டருக்கு உயிர் கொடுத்தது கூறிய அந்த பாராட்டை என்னால் மறக்கவே முடியாது என்று அஜய் கபூர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version