இலங்கை

சாரதியின் சாமர்த்தியத்தால் தடுக்கப்பட்ட பாரிய விபத்து

Published

on

சாரதியின் சாமர்த்தியத்தால் தடுக்கப்பட்ட பாரிய விபத்து

    நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் கலபட பகுதிக்கும் வட்டவளை பகுதிக்கும் இடையில் ரயில் பாதையில் நேற்று இரவு 07 மணியளவில் மரமொன்று வீழ்ந்துள்ளது.

இதன்போது அவ்வழியே பயணித்த ரயில் சாரதி ரயில் தண்டவாளத்தில் மரமொன்று வீழ்ந்துள்ளதை அவதானித்த நிலையில் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதனால் ரயில் விபத்தொன்று தவிர்க்கப்பட்டுள்ளது.

Advertisement

இதனையடுத்து ரயிலில் பயணித்த பயணிகள் ரயில் பாதையில் வீழ்ந்து கிடந்த மரத்தை கடும் முயற்சியால் அகற்றியுள்ளனர்.

இதனால் மதியம் 12.45 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த ரயில் சேவை தடைப்பட்டுள்ளது.

அதன் பின்னர் குறித்த ரயில் சுமார் ஒரு மணித்தியாலங்களின் பின்னர் ஹட்டன், நானுஓயா நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version