தொழில்நுட்பம்
டெஸ்லா ரோபோடாக்சிகள் அறிமுகம்… தானியங்கி வாகனத் துறையில் புதிய சகாப்தம்!
டெஸ்லா ரோபோடாக்சிகள் அறிமுகம்… தானியங்கி வாகனத் துறையில் புதிய சகாப்தம்!
டெக்சாஸின் ஆஸ்டின் நகரில், டெஸ்லா நிறுவனம் தனது ரோபோடாக்சிகளை சோதனை செய்யத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், தானியங்கி வாகனத்துறையில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது.இதில் பணம் செலுத்திய பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், “ரோபோடாக்சி லாஞ்ச்” என்று அறிவித்தார். சமூக ஊடகங்களில் புகழ்பெற்ற இன்ப்ளூயன்சர்கள் தங்கள் முதல் பயணங்களின் வீடியோக்களாகப் பதிவிட்டுள்ளனர்.இந்த நிகழ்வு, மனித ஓட்டுநர்கள் இல்லாத டெஸ்லா கார்கள் பணம் செலுத்தும் பயணிகளை ஏற்றிச் செல்வது, இதுவே முதல் முறை என்பதைக் குறிக்கிறது. ரோபோடாக்சி என்றால் என்ன?மிக எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், ரோபோடாக்சி என்பது ஓட்டுநர் இல்லாத ஒரு தானியங்கி டாக்சி. இது டெஸ்லாவின் அதிநவீன Full Self-Driving- FSD தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயங்குகிறது. உங்கள் ஸ்மார்ட்போனில் செயலியைப் பயன்படுத்தி டாக்ஸியை முன்பதிவு செய்கிறீர்கள்; டெஸ்லா கார் தானாக உங்கள் இருப்பிடத்திற்கு வந்து உங்களை ஏற்றிச்சென்று, நீங்கள் விரும்பிய இடத்திற்கு கூட்டிச் செல்கிறது. இந்த பயணத்தின்போது, வாகனத்தை இயக்க எந்த மனிதரும் இருக்க மாட்டார்கள்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கதனது X-ல் பதிவில், இந்தத் தருணத்தை “தசாப்த கால கடின உழைப்பின் உச்சக்கட்டம்” என்று எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். மேலும், “ஏஐ சிப் மற்றும் மென்பொருள் குழுக்கள் டெஸ்லாவுக்குள்ளேயே புதிதாக உருவாக்கப்பட்டன” என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார்.டெஸ்லாவின் ரோபோடாக்சி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஆஸ்டினின் சவுத் காங்கிரஸ் (South Congress) பகுதியில் தென்பட்டன. ஓட்டுநர் இருக்கையில் யாரும் இல்லாத நிலையில், ஒரு நபர் மட்டும் பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்தார். டெஸ்லா சுமார் 10 வாகனங்களுடன் சிறிய அளவிலான சோதனையைத் திட்டமிட்டுள்ளது. இதில், முன் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் “பாதுகாப்பு கண்காணிப்பாளர்களாக” (safety monitors) செயல்படுகிறார்கள். இருப்பினும், வாகனங்கள் மீது அவர்களுக்கு எவ்வளவு கட்டுப்பாடு இருந்தது என்பது தெளிவாகத் தெரிய வில்லை.சமீபத்திய நாட்களில், டெஸ்லா நிறுவனம் influencers-ஐ ரோபோடாக்சி சோதனைக்கு அழைத்திருந்தது. இந்த பயணங்களுக்கு $4.20 என்ற நிலையான கட்டணம் வசூலிக்கப்படுவதாக எலான் மஸ்க் X தளத்தில் தெரிவித்துள்ளார். டெஸ்லா முதலீட்டாளரும் சமூக ஊடகப் பிரபலமுமான சாவ்யர் மெரிட் (Sawyer Merritt) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் X தளத்தில் வீடியோக்களைப் பதிவிட்டுள்ளார். அதில், அவர் டெஸ்லா ரோபோடாக்சி செயலியைப் பயன்படுத்தி பயணத்தை ஆர்டர் செய்வது, பிக்கப் செய்யப்படுவது, அருகிலுள்ள ஒரு பார் மற்றும் உணவகமான ஃபிரேசியர்ஸ் லாங் அண்ட் லோ (Frazier’s Long and Low) வரை பயணம் செய்வது போன்றவை இடம்பெற்றுள்ளன.டெக்சாஸின் ஆஸ்டினில் டெஸ்லா தனது ரோபோடாக்சி சேவையை சிறிய அளவில் தொடங்கியிருந்தாலும், மஸ்க் உறுதியளித்தபடி, ஆஸ்டின் மற்றும் பிற நகரங்களில் பெரிய அளவில் கொண்டு செல்வதில் டெஸ்லாவுக்கு பெரும் சவால்கள் காத்திருப்பதாக தொழில் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தானியங்கி வாகன தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற கார்னகி மெலன் பல்கலைக்கழக கணினி-பொறியியல் பேராசிரியர் பிலிப் கூப்மன் (Philip Koopman) கூறுகையில், டெஸ்லா மற்றும் கூகுளின் வேமோ (Waymo) போன்ற சுய-ஓட்டுநர் நிறுவனங்கள் ரோபோடாக்சி துறையை முழுமையாக உருவாக்க இன்னும் பல ஆண்டுகள் அல்லது பல தசாப்தங்கள் ஆகலாம்.டெஸ்லாவின் ஆஸ்டின் சோதனை வெற்றி பெற்றால், அது “ஆரம்பத்தின் முடிவு – முடிவின் ஆரம்பம் அல்ல” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பல தொழில் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, டெஸ்லாவின் அதிகப்படியான பங்கு மதிப்பு, அதன் ரோபோடாக்சிகள் மற்றும் மனிதனைப் போன்ற ரோபோக்களை வழங்குவதற்கான திறனைப் பொறுத்தே உள்ளது. டெஸ்லா உலகின் மிகவும் மதிப்புமிக்க வாகன தயாரிப்பு நிறுவனமாக இருந்தாலும், இந்த தொழில்நுட்பங்களின் வெற்றி அதன் எதிர்காலத்திற்கு மிக முக்கியமானது.டெஸ்லாவின் ரோபோடாக்சி வெளியீட்டு தேதி நெருங்கி வந்த நிலையில், டெக்சாஸ் சட்டமியற்றுபவர்கள் தானியங்கி வாகனங்களுக்கான விதிகளை இயற்ற நடவடிக்கை எடுத்தனர். டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபோட் (Greg Abbott), குடியரசுக் கட்சிக்காரர், ஆட்டோமேடிக்-ஓட்டுநர் வாகனங்களை இயக்குவதற்கு மாநில அனுமதி கட்டாயம் என்பதை கடந்த வெள்ளிக்கிழமை சட்டமாக கையெழுத்திட்டார்.செப்.1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த சட்டம், இரு கட்சிகளைச் சேர்ந்த மாநில அதிகாரிகளும் ஓட்டுநர் இல்லாத வாகனத் தொழில் எச்சரிக்கையுடன் முன்னேற வேண்டும் என்று விரும்புவதை சுட்டிக்காட்டுகிறது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க டெஸ்லா நிறுவனம் விடுத்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவில்லை. மேலும், ஆளுநர் அலுவலகமும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.டெக்சாஸின் புதிய தானியங்கி வாகனச் சட்டம்:டெஸ்லா போன்ற நிறுவனங்கள் டெக்சாஸில் தங்களது தானியங்கி வாகனச் சேவைகளைத் தொடங்குவதற்கு வழிவகை செய்யும் புதிய சட்டம், மாநிலத்தின் முந்தைய “கட்டுப்பாடுகளுக்கு எதிரான” நிலைப்பாட்டை மென்மையாக்கியுள்ளது. 2017 ஆம் ஆண்டு டெக்சாஸ் சட்டம், நகரங்கள் சுய-ஓட்டுநர் கார்களை ஒழுங்குபடுத்துவதைத் திட்டவட்டமாகத் தடை செய்திருந்தது.புதிய சட்டம், தானியங்கி வாகன ஆபரேட்டர்கள் மனித ஓட்டுநர் இல்லாமல் பொதுச் சாலைகளில் செயல்படுவதற்கு முன், டெக்சாஸ் மோட்டார் வாகனத் துறையிடம் (Texas Department of Motor Vehicles) அனுமதி பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. மேலும், மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என மாநில அதிகாரிகள் கருதும் ஆபரேட்டர்களின் அனுமதியை ரத்து செய்ய இந்த சட்டம் மாநில அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த சட்டமானது, அவசரகால சூழ்நிலைகளில் தங்களது ஓட்டுநர் இல்லாத வாகனங்களை எப்படி கையாள்வது என்பது குறித்த தகவல்களை முதல் பதிலளிப்பவர்களுக்கு (first responders) நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றும் கோருகிறது.”தானியங்கி மோட்டார் வாகனம்” (automated motor vehicle) என்பதற்கான சட்டத்தின் அனுமதித் தேவைகள் கடினமானவை அல்ல. ஆனால், வாகனங்கள் சட்டப்பூர்வமாகவும் பாதுகாப்பாகவும் செயல்பட முடியும் என்று நிறுவனங்கள் சான்றளிக்க வேண்டும். இது, அங்கீகரிக்கப்பட்ட தரத்தின் கீழ் “நிலை 4″ (Level 4) தானியங்கி ஓட்டுநர் திறனைக் கொண்டதாக தானியங்கி வாகனத்தை வரையறுக்கிறது. அதாவது, குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் மனித ஓட்டுநர் இல்லாமல் இது செயல்பட முடியும். நிலை 5 தன்னாட்சி (Level 5 autonomy) என்பது உச்சபட்ச நிலையாகும். கார் எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும் தானாகவே ஓட்ட முடியும் என்பதைக் குறிக்கிறது.டெக்சாஸில் இந்த விதிகளுக்கு இணங்குவது, சில மாநிலங்களை விட, கலிபோர்னியாவை விட மிக எளிதானதாக இருக்கிறது. கலிபோர்னியா, மாநில மேற்பார்வையின் கீழ் வாகன சோதனைத் தரவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோருகிறது. தென் கரோலினா பல்கலைக்கழக சட்டப் பேராசிரியரும், தானியங்கி ஓட்டுநர் குறித்து கவனம் செலுத்துபவருமான பிரையன்ட் வாக்கர் ஸ்மித் (Bryant Walker Smith) கூறுகையில், குறைந்தபட்ச விண்ணப்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எந்தவொரு நிறுவனமும் டெக்சாஸ் அனுமதியைப் பெறும் என்று தெரிகிறது. ஆனால், சிக்கல்கள் ஏற்பட்டால் அந்த அனுமதியை இழக்கவும் நேரிடும்.”கலிபோர்னியாவில் அனுமதி பெறுவது கடினம், ஆனால் இழப்பது எளிது,” என்று அவர் கூறினார். பாதுகாப்பிற்கான எலான் மஸ்க்கின் உறுதிமொழிகளும் சவால்களும்: டெஸ்லாவின் ரோபோடாக்சி வெளியீடு, சுய-ஓட்டுநர் டெஸ்லா கார்களை வழங்குவது குறித்த எலான் மஸ்க்கின் ஒரு தசாப்தத்திற்கும் மேலான நிறைவேறாத வாக்குறுதிகளுக்குப் பிறகு வந்துள்ளது. இந்த வெளியீட்டில் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மஸ்க் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஆஸ்டினில் ரோபோடாக்சி பாதுகாப்பைப் பற்றி டெஸ்லா “அதி தீவிரமாக” (super paranoid) இருக்கும் என்று மஸ்க் கூறியுள்ளார். இதில் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே செயல்படுவது அடங்கும். ஆஸ்டினில் உள்ள இந்த சேவைக்கு வேறு சில கட்டுப்பாடுகளும் உண்டு. மோசமான வானிலை நிலைகளில் ரோபோடாக்சிகள் இயக்கப்படாது.