இலங்கை

திருட்டு சம்பவங்களுடன் தொடர்பு ; முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் கைது

Published

on

திருட்டு சம்பவங்களுடன் தொடர்பு ; முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் கைது

  பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் நாரஹென்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நாரஹென்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கொழும்பு, நாரஹென்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Advertisement

கைதுசெய்யப்பட்டவர் அயகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் என கூறப்படுகின்றது.

சந்தேக நபர் நாரஹென்பிட்டி பிரதேசத்தில் வீடொன்றின் கதவை உடைத்து ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடுதல் மற்றும் நாரஹென்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் கதவை உடைத்து 12 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடுதல் உள்ளிட்ட பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரஹென்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version