இலங்கை
நாட்டில் வருடத்தின் முதல் 5 மாதங்களில் 2 டன் நிறை போதைப்பொருள் மீட்பு
நாட்டில் வருடத்தின் முதல் 5 மாதங்களில் 2 டன் நிறை போதைப்பொருள் மீட்பு
இலங்கையில் இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் மொத்தமாக சுமார் 2 டன் நிறையுடைய ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
எதிர்வரும் 26 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் கருத்துரைக்கும்போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.