பொழுதுபோக்கு

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு; நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை!

Published

on

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு; நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்திடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவருக்கு சென்னை மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் அமைந்துள்ள மருத்துவமனையில் நடிகர் ஸ்ரீகாந்திற்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையின் அறிக்கைகள் வெளியான பின்பு காவல்துறையின் நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.இயக்குனர் சசி இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், ஜூட், போஸ், வர்ணஜாலம், பூ உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர், தற்போது தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில், முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில், தினசரி, கொஞ்சம் காதல், கொஞ்சம் மோதல் என்ற திரைப்படம் வெளியானது.இதனிடையே போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில், நடிகர் ஸ்ரீ காந்த் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிரசாத் என்பவரிடம் இருந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருளை வாங்கி பயன்படுத்தியதாக வெளியானது. ஏற்கனவே பிரதீப் குமார் என்பவர் முன்னாள் அதிமுக பிரமுக பிரசாத்திற்கு போதை பொருள் விற்பனை செய்யப்பட்டது விசாரணைகள் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பெங்களூரழல் வாசித்து வரும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் போதைப்பொருள் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.இதனடையே, அதிமுக பிரமுகரிடம் நடத்திய விசாரணையில் நடிகர் ஸ்ரீகாந்தின் பெயரும் இருப்பதால் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version